உயிர்ப்பூ அமைப்பினால் பழுகாமம் பிரதேசசபை முன்பள்ளி பாடசாலை புனரமைப்பு.






உயிர்ப்பு அமைப்பினால் பழுகாமம் பிரதேசசபை முன்பள்ளி பாடசாலை புனரமைக்கப்பட்டு மாணவர்களுக்கான கதிரை மேசைகள் வழங்கிவைக்கும் நிகழ்வானது இன்று காலை(04)பாடசாலையில் இடம்பெற்றது.

இவ் புனரமைப்புப் பணிக்கான நிதியுதவியினை சரவணமுத்து குமாரவேலு குடும்பத்தினர் உயிர்ப்பூ அறக்கட்டளை மற்றும் ஆரம்ப பாடசாலை நிருவாகத்தினருடன் இணைந்து இந்த உதவித்திட்டத்தினை வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசபைச் செயலாளர் எஸ்.பகீரதன்,உயிர்ப்பூ அமைப்பின் பொறுப்பாளர் நிஷாந்தி,பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.கடந்த காலங்களில் உயிர்ப்பூ அமைப்பினால் இவ் முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.