ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரை தமது கட்சியின் ஆதரவை கோரவில்லை - மஹிந்த !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உரிய நேரத்தில் அறிவிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தை இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரை தமது கட்சியின் ஆதரவை கோரவில்லை எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷ இன்னும் காலம் காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.Published from Blogger Prime Android App