மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரநாதர்(சிவன்)ஆலய சங்காபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இன்று(11) 1008 சங்குகளால் சங்காபிஷேகமும் திருப்பழுகாமம் ஏரிக்கரை பிள்ளையார் ஆலயத்திலிருந்து பெண்கள் பாற்குடபவனியுடன் ஆரம்பித்து வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தனர்.
பக்தர்கள் புடை சூழ மங்கள வாத்தியங்கள் முழங்க பிரதிஸ்டா பிரதமகுரு சிவஸ்ரீ கேதீஸ்வர பவித்திர குருக்கள் தலைமையில் சங்காபிஷேகமும் மஹா கும்பாவிஷேகத்தை சிறப்பிக்கும் முகமாக கும்பாவிஷேக மலர்வெளீயிடும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
















