


சற்று முன் நாவற்குடாவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம்.
மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் சற்று நேரத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.