மட்டக்களப்பு இளைஞன் யாழில் சடலமாக மீட்பு !

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (31) பதிவாகியுள்ளது .

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே இவ்வாறு நிலையில் உயிரிழந்த மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாகவும் திங்கட்கிழமை (31) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
Published from Blogger Prime Android App